அவினாசியை அடுத்த கருக்கம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த துரையன் என்பவரது மகன் ராஜேஸ் (வயது 21). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
அந்த மாணவியை கடத்தி சென்று ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த மாணவியின் தாயார் அவினாசி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை ராஜேஸ் கடத்தி சென்று பாலியல் ரீதியதாக துன்புறுத்தியதால் ராஜேசை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.