இலங்கை வீரரை புகழ்ந்து தள்ளிய ரோகித் சர்மா! அவர் ஒரு மேட்ச் வின்னர் என பதிவு

0
427

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவருமான ரோகித் சர்மா, மலிங்காவின் இடத்தை நிர்ப்புவது கஷ்டம், அவர் ஒரு மேட்ச் வின்னர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தவர், இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக, மும்பை அணிக்காக ஆடி வந்த மலிங்கா, இனிமேல் உரிமையாளர்கள் இருக்கும் டி20 லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதனால் இந்தாண்டு மும்பை அணியில் இருந்து மலிங்கா நீக்கப்பட்டார். மலிங்கா இல்லாதது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று பலரும் கூறப்படும் நிலையில், ரோகித்சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லசித் மலிங்காவை நாங்கள் மிஸ் பண்ணுவோம்.

இவர் ஒரு மேட்ச் வின்னர். இவரால் நாங்கள் பல போட்டிகளில் வெற்றி கண்டுள்ளோம். இவரது பிரிவை எங்கள் அணியில் இருக்கும் அனைவரும் உணர்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.