இலங்கையில் கொழும்பு முதல் பதுளை வரையிலான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன..!

0
368

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான தெனுவர மெனிக்கே புகையிரத சேவைகள்  மீண்டும் அறிவிக்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத சேவைகள்  தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு பயணத்தை மேற்கொள்ள இருந்த தெனுவர மெனிக்கே புகையிரதம் (எண் 1001) இன்று முதல் நிறுத்தப்படுகின்றது.

மேலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை செல்லும் தெனுவர மெனிக்கே  புகையிரதம் (எண் 1002) நாளை (29) முதல் நிறுத்தப்படும் என இலங்கை புகையிரத சேவைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.