திருடன் என நினைத்து 15 வயது சிறுவனை அடித்தே கொன்ற ஊர் மக்கள்!

0
507
people killed 15-year-old boy killing thief india tamil news

கரூர் மாவட்டம்,தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை காவல் சரகத்திற்கு உட்பட்ட அல்லாலிகவுண்டனூர் பகுதியில் வசித்து வருபவர் இளஞ்சியம்.people killed 15-year-old boy killing thief india tamil news

இவருக்கு பாலசுப்பிரமணியன் என்ற பதினைந்து வயது மகன்,நந்தினி என்ற 5 வயது மகள் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இதில் பாலசுப்பிரமணியன் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு ஊர் சுற்றி வருவதாக தெரிகிறது.

இப்பகுதியில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்திருக்கிறது.அந்த திருட்டுச் சம்பவங்களுக்கும், பாலசுப்ரமணியனுக்கும் தொடர்புள்ளது என்று முன்னதாக பொது மக்கள் சந்தேகப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,நேற்று இரவு பாலசுப்ரமணியன் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

அதேபோல் மற்றொரு வீட்டில் செல்போன் திருடு போயிருந்தது. இப்படி பக்கத்து பக்கத்து வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்ததால்,வழக்கம்போல் அந்த வீடுகளுக்கு அருகில் உள்ள பாலசுப்ரமணியன் தான் அந்த திருட்டுச் சம்வங்களை அரங்கேற்றியிருக்க முடியும் என்று நினைத்துள்ளனர்.

அதனால்,பாலசுப்ரமணியன் மீது சந்தேகப்பட்ட ஊர் பொதுமக்கள் சிறுவனை அவனது வீட்டில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பாலசுப்ரமணியன் ‘நான் திருடவில்லை’ என்று மறுத்துள்ளார். ‘நீதான் திருடி இருப்ப!’ என்றபடி,அவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் குறித்து நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட வெள்ளியணை காவல்துறையினர்,அப்பகுதியைச் சேர்ந்த சுமார் ஐந்து பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் பாலசுப்பிரமணியன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இப்படி 15 வயது சிறுவனை திருட்டு சம்பவங்களில் சந்தேகப்பட்டு கிராம மக்களே அடித்து கொன்றதால்,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :