ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!

0
513

வடக்கு அமைச்­சர் அனந்திக்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்று அவரின் சட்­டத்­த­ரணி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். இந்­தக் கருத்­தால் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை எதிர்­கொள்­ளும் அபா­யத்தை திரு­மதி அனந்தி சசி­த­ரன் எதிர்­நோக்­கி­யுள்­ளார். North Province Minister Ananthi Sasitharan Today Tamil News 

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர்­க­ளான திரு­மதி அனந்தி சசி­த­ரன், க.சிவ­நே­சன் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.

அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் சார்­பில் மன்­றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி கணேஸ், தனது கட்­சிக்­கா­ர­ருக்கு குற்­றப் பத்­தி­ரம் ஆங்­கில மொழி­யில் வழங்­கப்­பட்­டுள்­ளது. அவ­ரால் ஆங்­கி­லம் வாசிக்­கவோ, படிக்­கவோ தெரி­யாது என்று ஆட்­சே­பனை எழுப்­பி­னார்.

திரு­மதி அனந்தி சசி­த­ர­னின் கையெ­ழுத்­து­டன், உங்­க­ளால் (சட்­டத்­த­ரணி) நீதி­மன்­றுக்­குச் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள பதிலி (புரொக்ஸி) ஆங்­கி­லத்­தி­லேயே உள்­ளது. அவ­ரால் தமி­ழில் பதிலி சமர்­பிக்­கப்­ப­ட­வில்­லையே? ஆங்­கி­லம் தெரி­யாது என்­றால் எப்­படி பதி­லியை ஆங்­கி­லத்­தில் சமர்­பித்­துள்­ளார். இந்த மன்று அவ­ருக்கு இதற்கு முன்­னர் ஆங்­கி­லத்­தில் கட்­ட­ளை­கள் அனுப்­பி­யுள்­ளது.

அதன்­போது ஆங்­கி­லம் தெரி­யாது என்ற ஆட்­சே­பனை எழுப்­பப்­ப­ட­வில்லை என்­பதை மன்று சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அந்த ஆட்­சே­ப­னை­யை­யும் நிரா­க­ரித்­துள்­ளது.

இதன்­போது மனு­தா­ர­ரான டெனீஸ்­வ­ர­னின் சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­னாண்டோ, திரு­மதி அனந்தி சசி­த­ர­னால் ஆங்­கி­லம் வாசிக்­கவோ, படிக்­கவோ தெரி­யாது என்­பதை மன்­றில் பதிவு செய்ய வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளார். தனக்கு இந்த வழக்­கின் பின்­னர் அது உப­யோ­கப்­ப­டும் என்­றும் கூறி­யுள்­ளார்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் திரு­மதி அனந்தி சசி­த­ரன் ஆங்­கி­லத்­தில் உரை­யாற்­றிய காணொலி மன்­றில் சமர்­பிக்­கப்­ப­டும் என்று சுரேன் பெர்­னாண்டோ தெரி­வித்­துள்­ளார். அவர் ஆங்­கி­லம் தெரி­யாது என்று கூறி நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­துள்­ளார் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

புகையிரதத்தில் மோதி 5 யானைகள் பலி! போக்குவரத்து பாதிப்பு!

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிப்பு! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!

Tamil News Group websites