ஆட்கடத்தல்களை தடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் பல நடவடிக்கைகள்

0
599
Australia intensifies anti human smuggling mechanism tamil News

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுகின்ற ஆட்கடத்தல்களை தடுப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. (Australia intensifies anti human smuggling mechanism tamil News)

இதற்காக விமான நிலையங்களிலும், விமானங்களிலும் ஆட்கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றவர்களை அடையாளம் கண்டு தடுக்கும் வகையிலான வேலைத் திட்டம் தற்போது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் ஸ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கான பயிற்சியளிப்புகளும் விமான சேவையாளர்களுக்கு அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவஅத்துடன், அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சிப்போர், கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கோ அல்லது அவரவர் நாடுகளுக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் எவரும் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Australia intensifies anti human smuggling mechanism tamil News