பரிஸிலுள்ள ஆடம்பர Ritz தங்குமிடத்தில் வைத்து சவுதி அரேபியாவைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் 8 இலட்சம் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Saudi family’s Jewellery robbery Paris
இந்த கொள்ளைச் சம்பவம் வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக இடம்பெற்றதாகவும், ஆனால் அதற்குரிய எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிஸில் தொடர்ச்சியாக இலட்சக்கணக்கான பெறுமதியுள்ள கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே Ritz தங்குமிடத்தில் இவ்வருட ஜனவரியில் ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மற்றும் மொடல் Kim Kardashian இடமிருந்து 9 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.