10 மாச குழந்தையை 7 ஆவது மாடியிலிருந்து கீழே வீசிய தாய்…!

0
311
France lady killed 10 month child case

தாயொருவர் தனது பத்துமாத குழந்தையை ஏழாவது தளத்தில் இருந்து வீசி கொலைசெய்த பெண் ஒருவருக்கு நேற்று எட்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. France lady killed 10 month child case

Raphael என அழைக்கப்பட்ட 10 மாத குழந்தையை கடந்த 2015, ஓகஸ்ட் 29 ஆம் திகதி பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து தூக்கி வெளியே எறிந்துள்ளார். எறிந்த உடனே குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. எந்த தாயும் செய்யாத, மிகவும் மோசமான மற்றும் புரியாத சம்பவமாக இது பார்க்கப்பட்டது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து 34. வயதுடைய குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டு மிக நீண்ட மற்றும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

கைது செய்யப்பட்ட Myriam D எனும் தாய், முதல் நாள் விசாரணைகளில், ‘நானும் எனது குழந்தையும் பாய்வதாக தான் எண்ணியிருந்தோம். என்னை ஏதோ ஒன்று தடுத்துவிட்டது, அதனாலே தான் அவனை போகவிட்டேன்’ என தெரிவித்திருந்தார். இதன் பிறகு குழந்தையின் தந்தையும் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு, இச்சம்பவத்தினால் மிகவும் மனமுடைந்து இருந்த அவர் மனநல சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், நேற்று பரிஸ் Assize நீதிமன்றத்தில், குறித்த பெண்ணுக்கு எட்டுவருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பரிஸில் தொழிற்சாலையிலிருந்து 200°c வெப்பம் வெளியேற்றம்… தொடரும் பதற்றம்…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிரான்ஸிற்கு றக்பி பயிற்சிக்காக சென்ற இளம் வீரர் மரணம்!
எமது ஏனைய தளங்கள்