மகாராஷ்டிராவில் அக்கா எந்த நேரமும் போனில் கதைத்து கொண்டிருந்ததை தாங்க முடியாத தம்பி அவரின் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. Maharashtra teenage boy killed elder sister gossip
மகாராஷ்டிரா தானே மாவட்டத்தை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் தனது நண்பருடன், தூங்கும் நேரம் உட்பட எல்லா நேரமும் போனில் கதைத்துக் கொண்டிருந்துள்ளார்.
இதனை அவதானித்த அந்த பெண்ணின் தம்பி, தூக்கத்திலிருந்து எழும்பி இரவில கூட போன் பேசிக்கொண்டிருக்கிறாய் என்று சண்டையிட்டுள்ளார். ஒரு அளவின் மேல் கோபம் தாங்க முடியாமல் அருகிலிருந்த தலையணை எடுத்து முகத்தின் மேல் வைத்து மூச்சு திணற கொன்றுள்ளான்.
அதன் பின்னர் குறித்த சிறுவனை பொலிஸார் கைது செய்ததுடன், அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.