நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைதான நடிகர் திலீப்பை, மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் மீண்டும் சேர்த்ததற்காக ரம்யா நம்பீசன் கடுமையாக விமர்சித்து, நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். Remya Nambeesan criticised MohanLal Dilip issue tamil news
அவரின் இந்த செயல் மலையாள சினிமா உலுக்கியதோடு, அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்களாம்.
இது பற்றி கேரளாவில் நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டமொன்றில் ரம்யா பேசிய போது, “நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியவரை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை எதிர்த்து நான் ராஜினாமா செய்ததால் எனக்கு பிரச்சினைகள் வருகின்றன. புதிய படங்களில் நடிக்க விடாமல் தடுக்கும் சூழ்நிலை இருக்கிறது. எனக்கு எதிராக தவறான வதந்திகளும் பரப்புகின்றனர். படப்பிடிப்பில் தொல்லை கொடுக்க கூடியவள் நான் என்று அவதூறு பரப்பியும் பட வாய்ப்புகளை கிடைக்க விடாமல் செய்கிறார்கள்” என்றார்.