சிலாபத்தில் மர்மம் : 12 வயது சிறுவனுடன் தங்கியிருந்த அமெரிக்க பெண் மரணம் : நேற்றிரவு சம்பவம்

0
908
usa woman dead Chilaw

சிலாபம், ரிதிவெல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்த அமெரிக்க நாட்டுப் பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். (usa woman dead Chilaw,Tamilnews, Srilanka Tamilnews)

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.

68 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அந்தப் பெண் ஒன்றரை வாரங்களுக்கு முன்னர் சிலாபம், ரிதிவெல்ல பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு பெற்று 12 வயதுடைய இலங்கை சிறுவன் ஒருவனுடன் தங்கியிருந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு கொழும்பு சுற்றுலாப் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய ஒருவர் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு பல சொத்துக்கள் இருப்பதாக அந்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெற உள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:usa woman dead Chilaw,usa woman dead Chilaw,usa woman dead Chilaw