கொழும்பு நகரில் முச்சக்கரவண்டியில் பயணிப்பவர்களே அவதானம்

0
629
Three wheeler travelers caution colombo city

கொழும்பு நகரில் முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் 40,000 க்கும் அதிகமானோர் தினமும் போதைப்பொருள் உட்கொண்டு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதாக சுயதொழில் நிபுணர்களின் தேசிய முச்சக்கரவண்டி கூட்டமைப்பின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். (Three wheeler travelers caution colombo city)

துர்நாற்றமில்லாத கஞ்சா, பாபுல், போதை மாத்திரைகள் மற்றும் 14 ரக போதைப்பொருட்களை அவர்கள் பாவிப்பதாகவும் துர்நாற்றம் வீசாமையினால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பிரிவின் தலைவருக்கு இதுகுறித்து தான் அறிவித்துள்ளதாகவும், எனினும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேல் மாகாணத்தில் மாத்திரம் முச்சக்கரவண்டிகளில் தொழில் புரிகின்றவர்கள் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் உள்ளதோடு, அதிகமானோர் கொழும்பு நகரில் வசிப்பவர்கள் எனவும் முச்சக்கரவண்டி போக்குவரத்து விரைவாக முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதான முச்சக்கரவண்டி நிறுத்தும் இடங்களில் போதைப்பொருள் விற்பனையும் அதிகமாக நடைபெறுவதாக தெரிவித்துள்ளதோடு, முச்சக்கரவண்டிகளில் தொழில் புரிகின்றவர்களுடன் நெறுங்கிய தொடர்புள்ளதால் பல தகவல்கள் கண்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு போதைப்பொருட்கள் பாவனையாளர்கள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவது பயணிகள் சேவைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும், இதனால் மக்கள் முச்சக்கரவண்டி தொழிலில் இருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும் எனவும் பின்னர் இந்த தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Three wheeler travelers caution colombo city