பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்

0
1028
talawakelle maddukalai tea estates road problems

தலவாக்கலை மட்டுகலை தோட்டத்தின் ஊடாக ரதல்ல பிரதான வீதிக்கு செல்லும் பிரதான பாதை பல வருட காலமாக செப்பனிடாமல் பாதை எது? குழி எது என்று தெரியாத அளவிற்கு காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். (talawakelle maddukalai tea estates road problems)

இந்தப் பாதையை 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அத்தோடு, இந்தப் பாதையில் தோட்ட நிர்வாகங்களுக்கு சொந்தமான கொழுந்து ஏற்றும் பாரவூர்திகள் தனியார் வாகனங்கள் செல்கின்றன.

கர்ப்பிணி தாய்மார்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவிப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், சில கர்ப்பிணி தாய்மார்கள் வாகனங்களில் செல்லும் போது தமது பிரசவ வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னர் குழந்தை பிரசவமாகிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பாதையை புனரமைக்குமாறு பிரதேச மக்கள் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த போதிலும் இதுவரை குறித்த பாதை திருத்தம் செய்யவில்லை என்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் பல வருட காலமாக இப்பகுதி மக்கள் எதிர்நோக்கி வந்த பாதை பிரச்சனை தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனின் கவனத்திற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவஞானம் கொண்டுவந்ததை அடுத்து குறித்த பாதையை செப்பனிட அமைச்சரின் நிதியில் ஒரு கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; talawakelle maddukalai tea estates road problems