முதலையை வைத்து வித்தை காட்டியவருக்கு நேர்ந்த பரிதாபம்

0
321

தாய்லாந்தின் இயாங் ராய் பகுதியில் செயல்பட்டு வரும் பொக்கதரா வனவிலங்குகள் பூங்காவில், பணிபுரியும் தாவோ என்ற 45 வயதுள்ள நபர் முதலையை வைத்து பார்வையாளர்களிடம் வித்தை காட்டிக் கொண்டிருந்தார். அதனை அருகிலிருந்த மற்றொருவர் பார்த்து கொண்டேயிருந்தார். இதற்கிடையில் திடீரென எதிர்பாராத நேரத்தில் முதலை ஒரு நிமிடம் தாவோ -வின் கையை பதம்  பார்த்துள்ளது.Thailand Crocodile gimmick  Handed Injury

இதில் நூலிழையில் உயிர் தப்பிய தாவோவின் கை முறிந்தது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனையடுத்து காயங்களுடன் இரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தாவோ இடம்பெயர்ந்தார். இரத்த வாசனையால் மேலும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்பட கூடாது என்பதற்காக உடனடியாக அருகிலிருந்த மற்றொரு வித்தை காட்டும் நபர் தண்ணீர் ஊற்றி இரத்தத்தை சுத்தம் செய்தார். இந்த சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tags :- Thailand Crocodile gimmick  Handed Injury

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்