மகாவலி எல் திட்டத்தில் அதிகாரிகள் ஒதுக்கீடு செய்தனர் என்று கூறி காணிளை அபகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.(Sinhala People Land Seize Mullaitivu ,Tamilnews,Srilanka Tamilnews)
அந்தப் பகுதியில் குடியேற் றப்பட்டுள்ள சிங்களக் குடும்பங்களே காணிகளை அபகரிக்கும் முயற்சியில் இறங்கின எனத் தெரிவிக்கப்பட்டது.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணிக்கு அப்பால் தமிழர்களின் பூர்வீக பகுதிகளான சிவந்தா முறிப்புக்குளம் உள்ளது. அதனை அண்டி வயல் நிலங்கள் உள்ளன. இந்த வயல் நிலங்களையே அகரிக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் காணிகள் மகாவலி எல் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டவை என்று காணிளை அபகரிக்க முயன்ற சிங்களக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.ஆனால், அது ஏற்கனவே தமிழர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
‘பெக்கோ’ இயந்திரத்தின் மூலமாக இந்த இடத்தைத் துப்புரவு செய்து வயல் வரம்புகளை அமைக்கும் பணியைச் காணிகளை அபகரிக்க முயன்றவர்கள் தொடங்கியிருந்தனர். கடந்த இரண்டு தினங்களாக இது இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினமும் காணிகளை அவர்கள் துப்புரவு செய்துகொண்டிருந்தபோது அது குறித்து கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினர் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் தினைக்களத்தினர் ஆகியோருக்கு தெரியப்படுத்தினர்.
குறித்த இடத்துக்குச் சென்ற ரவிகரன், கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் கிருசுணன் – ஜெகன்நாத் மற்றும் திணைக்கள பணியாளர் அங்கு விசாரணைகளை மேற்கொண்டனர்.
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினரே அந்தக் காணிகளைத் தமக்கு வழங்கினர் என்று காணிகளைத் துப்புரவு செய்த சிங்களக் குடும்பங்கள் தெரிவித்தன.
ரவிகரன் உடனடியாக மாவட்டச் செயலருக்குத் தகவல் வழங்கினார். கமலந சேவைகள் திணைக்களத்தினர் மகாவலி அதிகார சபையிடம் வினவினர். சம்பவ இடத்துக்கு மகாவலி அதிகார சபையினர் விரைந்தனர். தாங்கள் காணிகளை வழங்கவில்லை என்று உறுதியளித்தனர்.
இதனைஅடுத்து காணிகள் அபகரிககும் முயற்சி தடுக்கப்பட்டது. இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்குமாறு ரவிகரன் மாட்டச் செயலரைக் கேட்டுக்கொண்டார். சம்பவ இடத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலர் இ.பிரதாபனும் இருந்தார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:Sinhala People Land Seize Mullaitivu ,Sinhala People Land Seize Mullaitivu ,