சற்றுமுன்னர் கோட்டை ரயில் நிலையத்தில் அமைதியின்மை

0
703
colombo fort railway station tension situation

கோட்டை ரயில் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(colombo fort railway station tension situation, Tamilnews)

ரயில்வே தொழிற்சங்கங்கள் திடீரென ஆரம்பித்த இரண்டு மணித்தியால பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இன்று பிற்பகல் 2 மணிமுதல் 4 மணிவரை இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. எனினும் புறக்கணிப்பு நிறைவடைந்தும் ரயில் சேவை வழமைக்குத் திரும்பாததால் பயணிகளுக்கும், ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காணிப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்ததாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:colombo fort railway station tension situation,colombo fort railway station tension situation,colombo fort railway station tension situation