குடும்ப பெண்களை சீரழிக்கும் நுண்கடன்களுக்கு முடிவு! அமைச்சரவை அனுமதி கிடைத்தது!

0
728

திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகலை, புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெற்றுக்கொண்ட நுண்கடன்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. Sri Lanka Ministry Permit Cancel Micro Credits Family Women Got

இதன் படி 12 மாவட்டங்களில் உள்ள, பெண்கள் பெற்றுள்ள ஒரு லட்சம் ரூபாவுக்கும் குறைவான நுண்கடன்களே இரத்து செய்யப்படுகின்றது.

மேலும் இந்த மாவட்டங்களில் உள்ள பெண்கள் ஒரு லட்சம் ரூபா அல்லது அதற்கு குறைவான நுண்கடன்களை பெற்றிருந்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கான அமைச்சரவை யோசனையை நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்திருந்தார்.

குறித்த விடயம் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites