கருகலைத்து கையில் கருவுடன் புகார் அளிக்க சென்ற இளம் பெண்..! – அதிர்ச்சியில் போலீஸார்!

0
563
young lady complaint naked eye - police shock

லக்னோ, உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்க கையில் கருவுடன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.young lady complaint naked eye – police shock

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பெண்கள் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்படுவதும் தற்போது அம்மாநிலத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை நிரூபிக்க இளம் பெண் தனது 5 மாத கருவை கையில் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 வயது இளம் பெண் :

பலாத்காரம் உத்தர பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் ஹசன்பூர் கொட்வாலி பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் தனது தாயுடன் ஹசன்பூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பலாத்காரம் கருக்கலைப்பு :

அதில் மனோஜ் என்ற 22 வயது இளைஞர் தன்னை 5 மாதங்களுக்கு முன் துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்ததாக  தெரிவித்துள்ளார். மேலும் அந்த இளைஞர் தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறினார்.

கையில் கரு – போலீஸ் அதிர்ச்சி :

கருக்கலைப்பு செய்ததற்கான ஆதாரமாக பையில் வைத்து 5 மாத கருவையும் கையில் எடுத்து சென்று காண்பித்தார். பையில் கரு இருந்ததைக் கண்ட போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தடயவியல் சோதனை :

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய மனோஜை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கருவை பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

அப்பகுதியில் பெரும் பரபரப்பு :

இளம்பெண் ஒருவர் கருவுடன் காவல் நிலையத்திற்கு சென்று பலாத்கார புகார் அளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :