நள்ளிரவு தொடக்கம் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

0
446
tamilnews CEYPETCO fuel prices increased midnight today

(tamilnews CEYPETCO fuel prices increased midnight today)

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு தொடக்கம் மீண்டும் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விலை தொடர்பாக இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள இன்று (10) மாலை நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டோன் 92 வகை பெற்றோலின் விலை 8 ரூபாவாலும், ஒக்டோன் 95 வகை பெற்றோலின் விலை 7 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஒக்டோன் 92 வகை பெற்றோலின் புதிய விலை 145 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோலின் புதிய விலை 155 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

டீசலின் புதிய விலை 118 ரூபாவாகவும், சூப்பர் டீசலின் புதிய விலை 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

(tamilnews CEYPETCO fuel prices increased midnight today)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை