இராஜாங்க அமைச்சர் விஜயகலா போன்றோரின் கருத்தால் சிங்கள அரசியல் தலைவர்களின் இயலாமை வெளிப்படுவதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். Gnanasara Thero Says Reason Behind North Area Violence
அத்துடன், இந்த இயலாமைக்கு அரசியல் உலோபித்தனமும், சந்தர்ப்பவாதமுமே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த அரசியல் வாதிகளினால் நாட்டில் ஒரு சட்டத்தை பேண முடியாதுள்ளது. விஜயகலா போன்றோரின் அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியாதுள்ளது.
சில பொழுது விஜயகலா உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் வடக்கிலிருந்து இராணுவ, பொலிஸ் அதிகாரத்தை குறைக்க வேண்டும் எனவும், பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை நீக்குமாறும் கூறுகின்றனர்.
இவ்வாறு பாதுகாப்புக்கள் நீக்கப்பட்டதன் பின்னர், தமது பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படும் போது விஜயகலா போன்றே தமிழ் அமைப்புக்கள் மீண்டும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு விரல் நீட்டுகின்றனர்.
இந்த நாட்டில் தமிழர் என்பதற்காக முகம்கொடுத்த பிரச்சினை என்ன? என்றே எம்மால் கேட்க வேண்டியுள்ளதாகவும் ஞானசார தேர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சித்திரவதைக்குள் ஈழ அகதிகள்; அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்
- சமூக ஒற்றுமையே பலமான ஆயுதம்; சதிகளை முறியடிப்போம்
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
- வவுனியாவில் தொடரும் வாள்வெட்டு; 10 பேர் கைது
- பாடசாலை செல்ல மாட்டோம்; கால்களை ப்ளேட்டால் வெட்டிய மாணவர்கள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்