ஓஸ் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் கைது

0
746
suspect arrested fatal shooting, suspect arrested fatal, suspect arrested, arrested fatal shooting, fatal shooting, Tamil Netherland news

பீட்டர் நெட்டனின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசார் ஓஸ்ஸிலிருந்து ஒருவரை கைது செய்தனர். திங்களன்று காலை அதிகாலையில் 30 வயதான மனிதன் ஓஸ்ஸில் ஹூகேஹுவல்ஸ்ட்ராட் என்ற இடத்தில் ஒரு கேரவன் பூங்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.suspect arrested fatal shooting

பீட்டர் நெட்டனின் படுகொலை தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொலையாளி போலீஸ் நிலையத்தில் வந்து வந்து சரணடையவே, அவரை உடனடியாக கைது செய்தனர்.
எனினும் அவர் அந்த கொலையுடன் எவ்வாறு தொடர்புபட்டுள்ளார் என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

விசாரணையை போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

திங்கட்கிழமை அதிகாலை ஓஸ்ஸில் இருக்கும் ஒரு கரவான் பூங்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 30 வயதான பீட்டர் நெட்டென் என அடையாளம் காணப்பட்டார். குறித்த நபர் தனது பாட்டி வீட்டு கொட்டிலில் கஞ்சா சேமித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர் என கூறப்படுகிறது.

Hoogheuvelstraat நகரின் கரவன் பூங்காவில் திங்களன்று 2:30 மணியளவில் பீட்டர் நெட்டென் சுட்டுக்கொல்லப்பட்டார். அவசர சேவைகள் ஊழியர்கள் அவரை மீட்க முயன்றும் முடியாமல் போனது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

காவல்துறையினர் ஒரு தடயவியல் விசாரணையை நடத்தினர்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஊடகச் செய்திகளின் படி, கிட்டத்தட்ட 50 கிலோகிராம் கஞ்சாக்களை அவர் தனது பாட்டியின் வீட்டு கொட்டிலில் சேகரித்து வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, 5 மாதங்கள் சிறையிலிருந்தார். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போலீஸ் ஒருவர் நேட்டனின் பாட்டி வீட்டை சோதனை செய்த போது இந்த கஞ்சா சேமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. நெட்டனின் பாட்டி சமூக சேவை செய்யும் ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

suspect arrested fatal shooting, suspect arrested fatal, suspect arrested, arrested fatal shooting, fatal shooting, Tamil Netherland news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்