மனைவியின் பிரிவை தாங்காத பொலிஸ் அலுவலர் தற்கொலை

0
594
police constable committed suicide shooting self barracks

(police constable committed suicide shooting self barracks)

கொகரேல்ல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்று (25) மாலை பொலிஸ் நிலையத்தில் வைத்தே தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடர்பாக தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி விபத்தொன்றில் சிக்கி கடந்த இரண்டு வருடங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று (25) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அந்த அதிர்ச்சி தாளாமல் அவர் தனது சேவைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியைக் கொண்டு இரவு 7 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

48 வயதான உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு 3 பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(police constable committed suicide shooting self barracks)

More Tamil News

Tamil News Group websites :