நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் – எடியூரப்பா

0
541

Minister Yeddyurappa said prove 100 percent majority Assembly

நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் என இந்திய கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார்.

எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த இந்திய உயர்நீதிமன்றம் நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை அடுத்து, தலைமை செயலாளர் உடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் என எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Minister Yeddyurappa said prove 100 percent majority Assembly

More Tamil News

Tamil News Group websites :