பாலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை கைது செய்த இஸ்ரேல் ராணுவம், அவரை ராணுவ ஜீப்பின் முன்புறம் கட்டி வைத்து இழுத்து செல்லும் காணொளி ஒன்று வைரலானது. இந்த காணொளியை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர்,
“மனிதர்களை கேடயமாக பயன்படுத்துவதை ஏற்கமுடியாது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.