நேற்று(ஜூன் 6) Var பகுதியிலுள்ள La Mole விமான நிலையத்திற்கு அருகே ஒரு சிறிய வணிக விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விமானம் தரையில் நிறுத்த கீழே இறங்கும்போதே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து மதியம் 1.15 மணிக்கு ஏற்பட்டுள்ளது. Commercial plane crashed La Mole Airport France
குறித்த விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் தீவிரமாக காயமடைந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதன்பின்னர், விமானி மற்றும் துணை விமானிக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறித்த விமானி, Gassin Health சென்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் தீவிரமாக காயமடைந்த இணை விமானி, ஹெலிகொப்டர் மூலம் Toulon இலுள்ள Sainte-Anne வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். குறித்த விமானம் கோர்சிகாவின் பிகாரியிலே உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- IS இல் அங்கம் வகித்தால் ஆயுள் தண்டனை!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!