சவுதி அரேபியாவை சேர்ந்த 70 வயது நபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. (Bresnan slept 30 years)
மேலும் அந்த நபர் தமது நிலை தொடர்பாக பல மருத்துவர்களை அணுகியும் அவர்களால் இதுவரை உறுதியான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது சவுதி இராணுவத்தில் சேவையாற்றிய காலகட்டத்தில் தொடர்ந்து 20 நாட்கள் அந்த நபர் தூங்காமல் கண்விழித்துள்ளார்.
இராணுவ சேவையை முடித்துக் கொண்ட பின்னர் மருத்துவமனை சென்று பரிசோதனை .இதனையடுத்து 4 நாடுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று பரிசோதித்துள்ளது.அவர்களால் உரிய காரணத்தை கண்டறியமுடியவில்லை என்றபோதும், குறித்த நபரின் மன அழுத்தமே காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தாலும், இதுவரை அவரால் தூங்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அல் பஹா பகுதி ஆட்சியர் இவரது நிலை குறித்து தெரிய வந்து விசாரித்துள்ளார். அவரிடம் தமக்கு ஒரு கார் மட்டும் போதும் என கூறியதை அடுத்து புதிய கார் ஒன்றை பரிசாக கொடுத்தது மட்டுமின்றி, எஞ்சிய காலம் மட்டும் அவரது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார் அல் பஹா ஆட்சியர்.
tags :- Bresnan slept 30 years
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- கானாவில் 675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்
- சலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை
- கூகுள் நிறுவனத்திற்கு ரூ.34,218 கோடி அபராதம் விதித்துள்ள ஐரோப்பிய யூனியன்
- ரூ.9 லட்சம் கோடி தங்கத்துடன் கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல் கண்டுபிடிப்பு
எமது ஏனைய தளங்கள்