சென்னை – இலங்கை இடையிலான முதல் பயணக் கப்பல்! கொடியசைத்து துவக்கம்

0
181

சென்னை – இலங்கை இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான “எம்வி எம்பிரஸ்” நேற்று திங்கட்கிழமை (05-06-2023) சென்னை துறைமுகத்தில் இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அவர்களால் முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கப்பல் சுற்றுலா முனையத்தின் 172.1 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கப்பலின் திறப்பு விழா சென்னை துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.

2,880 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் 3,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதி உள்ளது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இன்க்ரெடிபிள் இந்தியா இன்டர்நேஷனல் க்ரூஸ் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச கப்பல் சேவைக்காக சென்னை துறைமுகம் மற்றும் நீர்வழிகள் ஓய்வு சுற்றுலாவுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னணியில் இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த கப்பல் அடுத்த நான்கு மாதங்களில் இந்தியாவில் இருந்து 50,000 பயணிகளை இலங்கைக்கு ஏற்றிச் செல்லும் என கப்பலின் தலைமை அதிகாரி Jurgen Bailom தெரிவித்தார். 

மேலும்,  சென்னைக்கும் இலங்கைக்கும் இடையே முதல் கப்பல் சேவையை நாங்கள் தொடங்கியுள்ளதால், அது நாட்டில் கப்பல் சுற்றுலாத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது, ”என்று அமைச்சர் சர்பானந்தா சோனோ தெரிவித்துள்ளார்.