மகனை கொடூரமாக கொன்று சமைத்து சாப்பிட்ட தாய்!

0
162

எகிப்தில் ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மனகை திட்டமிட்டு கொலை செய்துள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்படுள்ளார். இந்த கொலை சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்றுள்ளது.

29 வயதுடைய ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மகனை தலையில் மூன்று முறை தாக்கி கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க அவர் தனது மகனின் உடலை அகற்ற முடிவு செய்துள்ளார். இதன்படி அவரது உடலைச் சிறு சிறு பாகங்களைத் துண்டித்துள்ளார்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகக் கொலை செய்யப்பட்டவரின் மாமா அங்கே வருகை தந்துள்ளார். அங்கிருந்த வாளி ஒன்றில் உடல் உறுப்புகள் இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ந்து போய்விட்டார். இதையடுத்து அவர் பொலிஸாருக்கு தகவல் அளித்த பிறகே இந்த கொடூர கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மகனை கொடூரமாக கொன்று சமைத்து சாப்பிட்ட தாய்! அதிர்ச்சி சம்பவம் | Mother Killed Her Son And Ate It Egypt

கொலை செய்த தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர் இல்லை என்பது விசாரணையில் உறுதியானது. மகனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அந்த பெண் தனது மகன் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்டதாகக் கூறி அதிர்ச்சி அளித்தார்.