சினிமா பாணியில் காதலியை பார்க்க வேடமணிந்த இளைஞர்!

0
202

காதலியை தனிமையில் பார்க்க புர்கா அணிந்து சென்ற இளைஞரை சந்தேகப்பட்டு வெளுத்து வாங்கிய சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா – உத்திரப்பிரதேசம், ஆரைய்யா மாவட்டம் ஜெகன்நாத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்சார். இவர் காதலியை தனிமையில் பார்க்க புர்கா அணிந்து அன்சார் காதலி வசிக்கும் பகுதியில் சுற்றி சுற்றி வந்துள்ளார்.

சினிமா பாணியில் காதலியை காண வேடமணிந்த இளைஞர்; நையப்புடைத்த மக்கள்! | Young Man Burqa Disguised See His Girlfriend

பொதுமக்களுக்கு சந்தேகம்

இவர் புர்கா அணிந்து சுற்றி, சுற்றி வந்தது, அங்கிருந்த பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரிடம் விசாரிக்க முற்பட்டபோது அன்சார் ஓட ஆரம்பித்துள்ளார்.

அன்சாரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது , பதில் ஏதும் சொல்லாமல் முழிக்க, குழந்தை கடத்துபவன் என்று நினைத்து அன்சாரியை பொதுமக்கள் அடித்து வெளுத்து வாங்கினர்.

இது தொடர்பாக பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்த நிலையில் விரைந்து சென்ற பொலிசார் அன்சாரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, காதலியை சந்திக்க புர்கா அணிந்து வந்ததாக அன்சாரி கூறியுள்ளார். 

சினிமா பாணியில் காதலியை காண வேடமணிந்த இளைஞர்; நையப்புடைத்த மக்கள்! | Young Man Burqa Disguised See His Girlfriend