காதலுடன் ஓடிய மணமகள்: 13 நாட்கள் மண்டபத்தில் காத்திருந்த மணமகன்!

0
227

திருமண நிகழ்வுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு மணமகள் காதலனுடன் ஒடிவிட்ட நிலையில் 13 நாட்கள் மணமகன் மண்டபத்தில் காத்திருந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் ராஜஸ்தானில் பாலி மாவட்டம் செளனா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ராஜஸ்தானில் செளனா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் திருமணத்தன்று மண்டபத்தில் அனைவரும் கூடியிருக்க மணப்பெண் தனக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கிறது என கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

காதலுடன் ஓடிய மணமகள்: 13 நாட்கள் மண்டபத்தில் காத்திருந்த மணமகன்! பரபரப்பு சம்பவம் | Bride Ran Away With Boyfriend Groom Waiting Hall

பின்னர் முகூர்த்த நேரம் வரவே மணப்பெண்ணை காணவில்லை என உறவினர்கள் அனைவரும் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மணமகள் கிடைக்கவில்லை.

இதனையடுத்து மணமகள் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தான் வீட்டை விட்டு ஓடியிருக்கிறது என தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை கேட்டு மனமுடைந்த மணமகன் எப்படியும் மணமகள் வருவாள் என்ற நம்பிக்கையில் மண்டபத்திலேயே காத்திருக்கிறார் ஆனால் மணபெண்ணோ வரவில்லை.

இதனிடையே மணமகனின் உறவினர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் மணமகன் மண்டபத்தை விட்டு வரவில்லை. இதனைத்தொடர்ந்து 13 நாட்கள் மணமகன் திருமண தலைப்பாகையை கழற்றாமல் கூட மணமகளுக்காக காத்திருந்திருக்கிறார்.

மேலும், மணமகளை காணவில்லை என அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் மணமகளை தேடி பிடித்து மீண்டும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் இரு வீட்டாரும் சமாதானம் அடைந்து மணமகன் காத்திருந்த அதே மண்டபத்தில் மீண்டும் திருமணம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.