குழந்தை இறந்ததை ஏற்காத தந்தை குழந்தையின் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து எடுத்துக்கொண்டு ஓடிய சம்பவம் ஒன்று நுவரெலியா வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
ஊனமுற்ற குழந்தையுடன் நுவரெலியா வைத்தியசாலைக்கு வந்த நபர் ஒருவர் குழந்தைக்கு சுகவீனம் இருப்பதாக வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து குழந்தை இறந்துவிட்டதாக தந்தையிடம் கூறியதாகவும் அப்போது தந்தை மருத்துவர்களிடம், ‘குழந்தைக்கு இப்படி நோய் எப்பொழுதும் வரும்’ என்று கூறியுள்ளார்.
அத்துடன் குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு வைத்தியசாலையில் இருந்து ஓடியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தன் குழந்தை இறந்ததை ஏற்காது பாசத்தால் தந்தை சடலத்தியும் எடுத்து சென்ற சம்பவம் அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.