பொலிஸார் அடாவடி! நள்ளிரவில் சட்டத்தரணி காண்டீபன் ஆதங்கம்

0
154

”தையிட்டியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது பலாலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையில் போராட்ட இடத்திற்கு வந்த பொலிஸார் மிலேச்சதனமாக தமது கட்சி தொண்டர்களை கைது செய்துள்ளதாக சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

‘‘மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் தையிட்டி விகாரையின் வழிபாட்டிற்கு இடையூறு விளைவிக்கின்றனர் என நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பௌத்தர்களின் வழிபாட்டிற்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது என நீதிமன்ற கட்டளையொன்றை பெற்றுள்ளனர்‘‘ என்றார்.