நடுரோட்டில் குளித்துக் கொண்டு சென்ற ஜோடிகள்.. வைரலாகும் வீடியோ!

0
196

ஸ்கூட்டில் நடுரோட்டில் குளித்துக் கொண்டு சென்ற ஜோடிகளின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடுரோட்டில் குளித்துக் கொண்டு சென்ற ஜோடிகள்

கோடை அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த அக்னி வெயில் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வட மாநிலங்களான உல்ஹாஸ்நகர் மற்றும் தானே மாவட்டத்தின் பிற பகுதிகளில் சமீப நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மும்பை அருகே தானேயில் வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை என்று வேடிக்கையாக ஒரு ஆணும், பெண்ணும் ஸ்கூட்டில் சென்றுக்கொண்டிருந்த போது, திடீரென பின்னால் அமர்ந்திருந்த பெண் வேடிக்கையாக வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றி குளித்துக் கொண்டு சென்றார். பின்னர், வண்டி ஓட்டிக்கொண்டு சென்ற அந்த நபர் மீதும் தண்ணீரை ஊற்றினார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ வைரலானதையடுத்து, மும்பை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் வேடிக்கையாக ஆபத்தை உணராமல் செயல்படுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.