இந்து சாமியார் ஒருவர் 78 இஸ்லாமிய பெண்களை இந்து மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து வைத்த உண்மை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில பரேலியில் உள்ள மதினாத் பகுதியில் அமைந்து இருக்கும் அகஸ்தியா முனி ஆசிரமத்தில் ஆச்சாரியார் பண்டிட் கேகே சங்காதர் என்பவர் வசித்து வருகிறார்.
பல்வேறு இந்துத்துவ கும்பல்களுடன் தொடர்பில் இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் கணக்குகள் வைத்திருந்துள்ளார். அதில் தன்னிடம் பேசும் இஸ்லாமிய பெண்களை மதம் மாற்றம் செய்து அவர்களை அவர்களின் இந்து காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இவ்வாறு சுமார் 78 முஸ்லிம் பெண்களை சாமியார் இந்து மதத்துக்கு மாற்றம் செய்து திருமணம் செய்து வைத்தது சம்பவம் தெரியவந்துள்ளது.
இவர் குறித்த தகவலின் அடிப்படையில் இந்து நாளிதழ் குழு சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
இதன்போது கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் முறை ஒரு பெண்ணை இந்துவாக மாற்றி திருமணம் செய்து வைத்ததாகவும், அதற்கு அடுத்து பல இஸ்லாமிய பெண்களை இதே போன்று மதம் மாற்றி திருமணம் செய்து வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.