யாழ் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம்

0
249

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (11) உயிரிழந்துள்ளார்.

உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார் என தெரிவிக்கப்படுகிற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ் சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு | Death Under Remand In The Jaffna Jail