யாழ்.தையிட்டி பகுதியில் அடாத்தாக மக்களின் காணிகளில் விகாரை கட்டியமைக்கு எதிராக இடம்பெற்றுவரும் போராட்ட களத்தில் புலனாய்வு முகவர்கள் உள்நுழைந்ததால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டம் நடத்துவதற்கு அமைக்கப்பட்ட கொட்டகையினுள் தமிழர்கள் போன்று சின்னங்களை அணிந்து கொண்டு போராட்த்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
கடும் எச்சரிக்கை
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டிவரும் என அவர்கள் எச்சரித்ததாகவும் கூறப்படுகின்றது.
அதோடு போராட்ட களத்திற்கு முன்னே செல்லக்கூடாது என கூறி அவர்களை மிரட்டி திசை திருப்ப முயன்றுள்ளனர்.
இளைஞர்களை திசை திருப்ப முற்பட்டபோது அருகில் இருந்தவர்கள் அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியே அகற்றியதாக அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.