தங்கச் சங்கிலியை திருடிய சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார்!

0
358

வென்னப்புவ – பேரகஸ்ஹந்திய வீதியில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

தங்கச் சங்கிலியை திருடிய சந்தேகநபரை கைது செய்வதற்காக நேற்று (29-03-2023) மாலை 03.00 மணியளவில் மாரவில பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போது, சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

கைது நடவடிக்கையின் போது அந்நபர் பொலிஸாரை வாளால் தாக்கியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்போது, காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்கச் சங்கலியை திருடிய சந்தேக நபரை சுட்டுக்கொன்ற பொலிஸார்! | Police Shot The Suspect Stole A Gold Bangle