பெரும் பாதுகாப்புடன் யாழ் வருகிறார் சவேந்திர சில்வா!

0
234

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் உள்ள விகாரையில் இடம்பெறும் நிகழ்விற்கு நாளைய தினம் (சனிக்கிழமை) சவேந்திர சில்வா வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் இடம்பெறும் நிகழ்விற்கே முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா வருகைதரவுள்ளார்.

இவ்வாறு சவேந்திர சில்வா வருகை தரும் நிகழ்விற்கு தென்னிலங்கையில் இருந்து 128 பௌத்த பிக்குகளும் அழைத்து வரப்படுகின்றனர்.

மேலும் இந்த நிகழ்வுகள் நாளை காலைமுதல் பிரித் ஓதுதல் மற்றும் விசேட பூசை ஏற்பாடுகள் என மிகப் பெரும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.