வவுனியாவில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இளம் குடும்பத்தின் இறுதி யாத்திரை!(Photos)

0
227

வவுனியா – குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் நால்வர் அடங்கிய குடும்பத்தினர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த 7 ஆம்திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42), வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் கெளசிகன் குடும்பத்தின் இறுதி யாத்திரை!(Photos) | Vavuniya Tamil Family Death Funeral

பொலிஸார் விசாரணை

குடும்பத் தலைவரான கௌசிகனின் சடலம் வீட்டின் விறாந்தைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதுடன், அவரது மனைவி, பிள்ளைகள் படுக்கையில் தூங்கும் நிலையிலும்   மீட்கப்பட்டிருந்தனர்.

வவுனியாவில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் கெளசிகன் குடும்பத்தின் இறுதி யாத்திரை!(Photos) | Vavuniya Tamil Family Death Funeral

மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இரு குழந்தைகளும் கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் கெளசிகன் குடும்பத்தின் இறுதி யாத்திரை!(Photos) | Vavuniya Tamil Family Death Funeral

அதேசமயம் கௌசிகனின் சடலத்தில் வேறு எந்தத் தடயங்களோ, காயங்களோ இல்லாத காரணத்தால் அவரது மரணம் தூக்கில் தொங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  அவர்களின் இறுதி நிகழ்வு பலரின் கண்ணீருக்கு மத்தியில் இன்று இடம்பெற்றது.

Gallery
Gallery
Gallery
Gallery