கொழும்பு – 15 முகத்துவாரம் பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிப் பிரயோகமொன்று இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முச்சக்கரவண்டியொன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை அணைய நாட்களாக தென்னிலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் இந்த சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது.