அவதானம் மக்களே; 78 வயது ஆச்சியால் சிக்கிய சிம் கார்டு விற்பனையாளர்!

0
225

78 வயதான ஆச்சியின் காதுகளில் இருந்த தோடுகளை களவாடிச் செல்ல முயன்ற கைபேசி சிம் கார்ட் விற்பனை செய்யும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனமடுவ கோண்வலகந்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கு தனியாக இருந்த மூதட்டியை சந்தேக நபர் நெருங்கிய போது விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த அந்த ஆச்சி அபாயக்குரல் எழுப்பியுள்ளார்.

சிம் கார்ட்டு விற்பனை

அவதானம் மக்களே; 78 வயது ஆச்சியால் சிக்கிய சிம் கார்ட் விற்பனையாளர்! | 78 Year Old Sim Card Seller Trapped By Achi

ஆச்சியின் அபாயக்குரலைக் கேட்ட கிராமவாசிகள் அந்த நபரை கையும் மெய்யுமாக பிடித்து ஹபராதுவ பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதானவர் என பொலிஸாரின் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

அந்த நபர் இன்றைக்கு பல மாதங்களுக்கு முன்னர் சிம் கார்ட்டுகளை விற்பனை செய்வதற்காக அந்தப் பிரதேசத்துக்கு வந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.