அச்சத்தில் இருக்கும் ஜனாதிபதி ரணில்; இரா.சாணக்கியன் தெரிவிப்பு..

0
244

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அச்சத்தில் இருக்கிறார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தெரியவந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R. Shanakiyan) தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்றைய தினம் (28-02-2023) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே த.தே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் தொடர்பிலும் இரா.சாணக்கியன் இதன்போது சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

அச்சத்தில் ஜனாதிபதி ரணில்: கூட்டமைப்பு எம்.பி தெரிவித்த தகவல் | President Ranil In Fear New Gazette Mp Shanakiyan

குறிப்பாக தெற்கில் தனக்கு மக்கள் பலம் இல்லை என்பதனையும், வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள செல்வாக்கினையும் கண்டு அஞ்சியே ஜனாதிபதி உள்ளுராட்சி மன்றத்தேர்தலினை ஒத்திவைக்க முற்படுகின்றார் என சந்தேகம் எழுந்துள்ளது எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.