யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த இரு பெண்கள்; கொலையா? தற்கொலையா?

0
211

இரு பெண்கள் தீயில் எரிந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு 200 மீட்டர்கள் தொலைவில் உள்ள வீட்டில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்கள் இருவரும் 65 வயதிற்கு மேற்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்தனர்.

யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த இரு பெண்கள்; கொலையா? தற்கொலையா? | Two Women Died Fire In Jaffna

கொலையா? தற்கொலையா? 

இந்நிலையில் இன்றையதினம் இவ்வாறு சடலமாக காணப்பட்டனர். அவர்களது சடலத்திற்கு அருகாமையில் தீப்பெட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கொலையா? தற்கொலையா? என இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.