அரசகாணியை குத்தகைக்கு வழங்கிய அரசியல்வாதி கைது!

0
236

புத்தளம், மஹகும்புக்கடலை பிரதேசத்தில் அரசாங்கத்துக்குச் சொந்தமான 200 ஏக்கர் காணியை வெளிநாட்டவருக்கு குத்தகைக்கு வழங்கிய அரசியல்வாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

24 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் பொதுஜன பெரமுனவின் ஆனமடுவ உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசகாணியை குத்தகைக்கு விட்ட அரசியல்வாதி! | The Politician Who Leased The Queen

புத்தளம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் 50 வயதுடைய முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.