யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் யாழில் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பங்குபற்றி வருகிறார். அந்தவகையில் யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் – கொம்பனிப்புலம் பகுதியிலும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதன் போது ஆரம்ப நிகழ்வாக குறித்த பகுதியில் உள்ள ஆலயத்தில் வழிபாடு இடம்பெற்றது.
இவ்வாறான இந்நிலையில் சஜித்திற்கு பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர்கள் காலணிகளுடன் ஆலயத்திற்குள் நுழைந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் காலணிகளை கழற்றிவிட்டு சென்றபோதும் அவரது பாதுகாவலர்கள் இவ்வாறு செய்தது அங்கிருந்த மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.