இலங்கையில் உணரப்பட்ட நிலநடுக்கம்!

0
395

வெல்லவாயவில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம், வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் இன்று 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

அதேவேளை  துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.