யாழ்.வலி வடக்கில் 108 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு!

0
366

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமார் 108 ஏக்கர் காணி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

பலாலி – அந்தனிபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்புக்கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட யாழ்.மாவட்டச் செயலர் அம்பலவாணனர் சிவபாலசுந்தரனிடம் கையளித்துள்ளார்.

யாழ்.வலி,வடக்கில் 108 ஏக்கர்காணி மக்களிடம் கையளிப்பு!(Photos) | 108 Acres Of Land To The People North Of Jaffna

காங்கேசன்துறை – மத்தி (ஜே 234) – 50.59 ஏக்கர் / மயிலிட்டி – வடக்கு (ஜே 246) – 16.55 ஏக்கர்/ தென்மயிலை (ஜே 240) – 0.72 ஏக்கர்/ பலாலி – வடக்கு (ஜே 254) – 13.033 ஏக்கர்/ நகுலேஷ்வரம் (ஜே 226) -28 ஏக்கர், மேற்படி கிராம சேவகர் பிரிவுகளில் மொத்தமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி மிக நீண்ட காலத்தின் பின்னர் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றத்திற்காக 130 குடும்பங்கள் பதிவு

யாழ்.வலி,வடக்கில் 108 ஏக்கர்காணி மக்களிடம் கையளிப்பு!(Photos) | 108 Acres Of Land To The People North Of Jaffna

இந்நிலையில் மீள்குடியேற்றத்திற்காக 130 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன.

இன்று விடுவிக்கப்பட்டுள்ள 108 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் அரச காணியாகும் இந்த காணி யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 5 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

யாழ்.வலி,வடக்கில் 108 ஏக்கர்காணி மக்களிடம் கையளிப்பு!(Photos) | 108 Acres Of Land To The People North Of Jaffna

மொத்தமாக 205 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன. மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐனாதிபதி பணித்துள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், மற்றும் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இ.இளங்கோவன், பிரதம செயலாளர், யாழ்.மாவட்டச் செயலர், யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பழை பிரதேச செயலர் மற்றும் பொதுமக்கள், படையினா, பொலிஸார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

 

யாழ்.வலி,வடக்கில் 108 ஏக்கர்காணி மக்களிடம் கையளிப்பு!(Photos) | 108 Acres Of Land To The People North Of Jaffna