யாழில் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டதில் பெரும் விபத்து!

0
429

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் அரச பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று மாலை 4.15 மணியளவில் நுணாவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மினி பேருந்து மீது மோதியது.

இந்த விபத்து சம்பவத்தில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்ட போதிலும் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.