கொழும்பில் புகையிரத விபத்தில் ஊடகவியலாளர் நிபோஜன் மரணம்!

0
528

கொழும்பில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (30-01-2023) திங்கட்கிழமை கொழும்பு தெஹிவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டு கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த எஸ்.என். நிபோஜன் பல அச்சுறுத்தல்கள் மத்தியிலும் கிளிநொச்சியில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள், காணி விடுவிப்பு போராட்டங்கள், மீள் குடியேறுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர்.

சிறந்த புகைப்பட கலைஞனாக புகைப்பட ஊடகவியலாளனாக பல கதை சொல்லும் புகைப்படங்களை செய்தி அறிக்கைகள் ஊடாக வெளிக்கொணர்ந்தவர்.