கொலை செய்யப்பட முன் குடும்பத்திற்காக ஷாப்டர் எழுதிய கடைசி உயில்..

0
386

சர்ச்சைக்குரிய வகையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு தனது கடைசி உயிலை எழுதியதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கடைசி உயிலின்படி, அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அவரது சொத்தில் பங்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த கடைசி உயில் தொடர்பான விவரங்கள் தற்போது பொலிஸாரிடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஷாப்டர் கொலை விசாரணை புதிய திசையில் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.